நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)
தி.மு.க. - 95,75,850 (23.6)
பா.ஜனதா - 22,22,090 (5.5)
தே.மு.தி.க. - 20,79,392 (5.1)
பா.ம.க. - 18,04,812 (4.4)
காங்கிரஸ் - 17,51,123 (4.3)
ம.தி.மு.க. - 14,17,535 (3.5)
சுயேச்சைகள் - 8,66,509 (2.1)
விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)
புதிய தமிழகம் - 2,62,812 (0.6)
மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)
ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)
இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)
பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)
நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)
1 comments:
மண்ணின் மைந்தர்களின் உரிமைக்கு வித்திட்ட தொகுதிகள் தருமபுரி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி. ஆனால் ஒரு ஊழல் கட்சி பெரிய வெற்றி பெற்றதற்கு காரணம் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கியதுதான். வரும் 2016 சட்டசபை தேர்தலில் இரண்டு ஊழல் கட்சிகள் ஒழிந்து நல்ல கட்சியான பாமக ஆட்சி வரவேண்டும்.
எனவே ஒவ்வொரு பகுதியிலும் ஊர் ஊராக கருத்துரையை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் இப்பொழுதே தயாராக வேண்டும். வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 100 தொகுதிகளை எந்த காரணத்தை கொண்டும் மற்ற கூட்டணி கட்சிக்கு தர கூடாது. இந்த 100 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெற்றே தீர வேண்டும். அதற்கான செயல் வீரர்கள் தேர்வு, பயிற்சி கொடுக்க வேண்டும். மற்ற 134 தொகுதியிலும் உள்ள பாமக செயல் வீரர்களை இந்த 100 தொகுதியில் பயன்படுத்தி , வேறு கட்சிகள் இங்கே வந்து வாக்கு கேட்க தகுதியில்லாத நிலையை கொண்டு வரவேண்டும். மற்ற கட்சிகள் இந்த 100 தொகுதிகளிலும் இருந்து விரட்டப்பட வேண்டும். அப்போதுதான் மண்ணின் மைந்தர்களின் உரிமையை காக்க முடியும்.
ஆயுதம் இல்லாமல் சண்டை போடுவதுதான் ஒரு வீரனுக்கு அழகு. அதுபோல் பணம் கொடுக்காமல் மக்களிடம் இனிமேல் எந்த கட்சியும் மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். பணம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் 2 ஊழல் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். ஊழலில் கொழுத்த இரண்டு ஊழல் கட்சிகளை இந்த மாநிலத்தை விட்டே மக்கள் விரட்ட வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும், ஒன்றியத்திலும், நகரத்திலும், மாநகரத்திலும் சிறந்த பேச்சாளர்களை கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். கடந்த 50 வருடமாக இரண்டு ஊழல் கட்சிகள் செய்த கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதனால் மக்கள் மனம் வெம்பி , இத்தனை வருடமாக இப்படிப்பட்ட இரண்டு ஊழல் கட்சிகளையா ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம் என்று வெறுக்க வேண்டும். எனவே ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை மக்கள் கண்டிப்பாக கொண்டு வருவார்கள். நாளை நமதே , பாமக ஆட்சி வர வேண்டும் என்பது ஆண்டவன் கண் திறந்து மக்களிடம் இட்ட கட்டளை .
கருத்துரையிடுக