PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மே 17, 2014

நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் ச. இராமதாசு வாழ்த்து

Posted by போராளி On AM 8:52 No comments

nr மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பதையடுத்து அக்கட்சியின் சார்பில் பிரதமராக பதவியேற்கவிருக்கும் மான்புமிகு. நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அய்யா அவர்களின் வாழ்த்துச்செய்தி:

 

 

பெறுநர்.

மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள்,
இந்தியாவின் 15ஆவது பிரதமர்,
காந்திநகர், குஜராத்.

அன்பிற்குரிய மோடி அவர்களுக்கு, வணக்கம்!

இந்தியாவில் நடைபெற்ற 16 ஆவது மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றமைக்காக நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குக் காரணமான இந்த மிகப்பெரிய வெற்றியை கட்டி எழுப்பியவர் நீங்கள் தான்.

குஜராத் மாநிலத்தில் எட்டப்பட்டது போன்ற வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் என்பதை இந்திய மக்கள் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களிடமிருந்து அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

(கையொப்பம்)

மருத்துவர் ச. இராமதாசு

-------------------------------------------------------------------- In English ---------------------------------------------------------------------

To

Honble. Narendra Modi,

Prime Minister Designate,

Gandhi Nagar, Gujarat.

Dear Modi, Vanakkam!

My heartiest congratulations to you on the unprecendented victory National Democratic Alliance has tasted in the 16th Lok Sabha election of the country. I also express my best wishes as you are going to become the 15th Prime Minister of the country. You are the architect of this victory that has secured majority for a Political Party after a gap of 3 decades.

The entire nation expect a lot from you, as they already aware Gujarat model development will benefit the entire country.

Though, in Tamilnadu We are not able to win as we had ecpected, We are going to win 2 seats. It will augur well for the future. I strongly believe that you will fulfill the expectations of the people of the State and the poll promises made by our alliance.

Yours,

( Dr. S. Ramadoss)