புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது.
எனவே, புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்து மாபெரும் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்
1 comments:
தற்போது தமிழக அரசியல் வரலாற்றில், மக்களுக்கு நல்லது செய்ய காத்திருக்கும், மக்களுக்காகவே உழைக்கும் நல்ல கட்சிகள் , நல்ல தலைவர்கள் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த வெற்றி கூட்டணி மகத்தான வெற்றி பெற மக்கள் ஆதரவு தரவேண்டும். கடந்த 47 வருடமாக இந்த தமிழ் மண்ணை சுரண்டிய இரண்டு ஊழல் (மக்கள் வரி பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்) கட்சிகள் இந்த தேர்தலில் ஒழிய வேண்டும்.
கருத்துரையிடுக