PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 17, 2014

இலங்கைக்கு எதிராக புதிய ஆதாரம்: இனியும் கருணை காட்டக் கூடாது -மருத்துவர் இராமதாசு

Posted by போராளி On 3:14 PM No comments

இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் மார்ச் 10 ந்தேதி அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

as_thumb[1]_thumb[2]

இலங்கையில் நடந்த இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான புதிய வீடியோ ஆதாரத்தை லண்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 6.11 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோ ஆதாரம் காண்பவர் இதயங்களை நொறுக்கும் வகையில் கொடூரமாகவுள்ளது.

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு சித்திரவதை உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களின் உடல்களை சுற்றி சிங்களப் படையினர்  நிற்கும் காட்சியுடன் புதிய வீடியோ ஆதாரம் தொடங்குகிறது. தமிழ் பெண்களும், பெண் விடுதலைப் புலிகளும் சீரழிக்கப்பட்டு, கொல்லப்பட்டதை கொண்டாடி மகிழும் சிங்களப்படையினர், ஆடையில்லாமல் கிடக்கும் அவர்களின் உடல்களை செல்பேசி மூலம் படம்பிடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பெண்களின் ஆடையற்ற உடல்கள் மீது துப்பாக்கி முனையால் குத்தும் இராணுவத்தினர், அருவருக்கத்தக்க சில வார்த்தைகளை உதிர்க்கும் காட்சிகளும் சேனல்-4 வெளியிட்ட வீடியோ ஆதாரத்தில் இடம்பெற்றுள்ளன.

புதிய ஆதாரத்தை ஆய்வு செய்த புகழ்பெற்ற தடயவியல் வல்லுனர் டாக்டர் ரிச்சர்ட் ஷெப்பர்ட், இந்த வீடியோ உண்மையானது தான் என்று சான்றளித்துள்ளார். மேலும், தமிழ் பெண்கள் அனைவரும்  மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் பெண்களின் உடல்களில் காணப்படும் காயங்களைப் பார்த்தால் அவை போர்க்களத்தில் ஏற்பட்டதைப் போன்று தோன்றவில்லை ; அவர்களை சிங்களப்படையினர் பிடித்து தனி இடத்தில்  வைத்து சித்திரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்களைப் போல தோன்றுகிறது; இந்த சித்திரவதையால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ; அவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களையும் இலங்கை இராணுவத்தினர் வெறித்தனமாக சிதைத்திருக்கிறார்கள் என்றும் ரிச்சர்ட் ஷெப்பர்ட் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைப் போர் முடிவடைந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விளக்கும் வகையில் எத்தனையோ வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவது, விடுதலைப்புலிகள் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்குப் பின் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவது, சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவது என சிங்களப்படையினர் போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வகையிலான ஏராளமான வீடியோ ஆதாரங்கள் கடந்த சில ஆண்டுகளில் வெளியாகியிருக்கின்றன.

இதுவரை வெளியான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் விட இப்போது வெளியாகியுள்ள ஆதாரம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழினத்தை அடியோடு கருவறுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்களப்படையினர் நிகழ்த்திய திட்டமிடப்பட்ட குற்றங்கள் அடங்கிய இந்த  வீடியோ ஆதாரம் அவர்களின் போர்க்குற்றங்களுக்கு மட்டுமின்றி, இனப்படுகொலைக்கும் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

அதேநேரத்தில், இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என உலகின் பல நாடுகள் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இவற்றுக்கும், தங்களுக்கும்  சம்பந்தமில்லை என்பதைப் போல இந்தியா கண்களை மூடிக்கொண்டிருப்பது தான் கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை குற்றவாளியான இலங்கை மீது இந்திய அரசு இனியும் கருணை காட்டினால் அதை வரலாறும் மன்னிக்காது; தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, ஜெனிவாவில்  நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப் படவுள்ள நிலையில்,  இலங்கை மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.